மாநகர சபைக்கு தெரிவு செய்யப்பட்ட புதிய உறுப்பினர் நன்றி தெரிவிப்பு!!!

(றிஸ்வான் சாலிஹு)

அக்கரைப்பற்று மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் கெளரவ உறுப்பினராக பதுர் வட்டாரத்தில் கடந்த உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிட்ட ஏ.சீ.எம்.நெளபர் நியமிக்கப்பட்டதையடுத்து, தனக்கு வாக்களித்த உறவுகளுக்கும் கட்சியின் அதியுயர்பீடத்திற்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நேற்று (04) புதன்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்றது.

கெளரவ மாநகர சபை உறுப்பினர் கருத்து தெரிவிக்கும் போது,

கடந்த உள்ளுராட்சி தேர்தலில் நான் போட்டியிவதற்கு சந்தர்ப்பம் வழங்கிய கட்சியின் தலைமைக்கு முதலில் நன்றி தெரிவித்தவனாக, தனக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த உறுப்பினர் பதவியானது கட்சியின் தீர்மானத்திற்கமைவாக சுழற்சி முறையில் வழங்கப்பட்ட ஒன்றாகும். இந்த வட்டார மக்களை மதித்து வழங்கப்பட்டிருக்கும் இந்த உயரிய பதவியை வழங்கிய தவிசாளர், ஏனைய உறுப்பினர்கள் மற்றும் தனக்கு வாக்களித்த உறவுகள் அனைவருக்கும் எப்போதும் நான் நன்றி கடமைப்பட்டவனாக இருப்பேன் என்றும், சபையால் வழங்கப்படும் கொடுப்பனவு மூலம் ஒரு சிறிய தேவையாவது சரியான முறையில் மக்கள் பயன் அடையக்கூடிய வகையில் அதை பாவிப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் சிறாஜ் மஸ்ஹூர் பிரதம அதிதியாகவும், கட்சியின் முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், கட்சியின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு, புதிய உறுப்பினர் நெளபர் அவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநகரசபை உறுப்பினருக்கான சத்திய உறுதிப்பிரமாணப்பத்திரத்தை, அக்கரைப்பற்று மாநகர சபை செயலாளர் ஏ.எம்.எச்.றஹ்மான்  அவர்களிடம் நேற்று ஒப்படைத்தமையும் குறிப்பிடத்தக்கது.













மாநகர சபைக்கு தெரிவு செய்யப்பட்ட புதிய உறுப்பினர் நன்றி தெரிவிப்பு!!! மாநகர சபைக்கு தெரிவு செய்யப்பட்ட புதிய உறுப்பினர் நன்றி தெரிவிப்பு!!! Reviewed by Editor on August 05, 2021 Rating: 5