(றிஸ்வான் சாலிஹு)
நிந்தவூர் பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய இலங்கை நிர்வாக சேவை அதிகாரி ரி.எம்.எம். அன்சார் அவர்கள் இன்று (25) புதன்கிழமை அக்கரைப்பற்று பிரதேச செயலாளராக, பிரதேச செயலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் உத்தியோகத்தர்கள் ஊழியர்களும் கொவிட் சுகாதார நடைமுறைகளை பேணி கலந்து கொண்டார்கள்.
அக்கரைப்பற்று பிரதேச செயலாளராக இதுவரை கடமையாற்றிய எம்.எஸ்.எம்.றஸான், இறக்காமம் பிரதேச செயலகத்த்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரி.எம்.எம்.அன்சார் அக்கரைப்பற்று பிரதேச செயலாளராக கடமையேற்றார்
Reviewed by Editor
on
August 25, 2021
Rating:
Reviewed by Editor
on
August 25, 2021
Rating:


