(கே.மாதவன், றிஸ்வான் சாலிஹு)
உலக நோயாளர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.ஏ.எம்.ஆஷாத் அவர்களின் வழிகாட்டலின் கீழ், வைத்தியசாலையின் தரமுகாமைத்துவ பிரிவின் பொறுப்பு வைத்தியர் டாக்டர் எஸ்.எப்.மஹ்ரூபா அவர்களின் தலைமையின் கீழ், கொவிட்-19 தொற்றுநோய் காலப்பகுதியில் சிறப்பாக சேவையாற்றியவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.
அந்த வகையில், வைத்தியசாலையில் கொவிட் காலப்பகுதியில் மிகவும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்த பிரிவுகளுக்கு நினைவுச்சின்னங்களும், ஏனை பிரிவுகளுக்கு Patient Safety இலட்சினை பொறிக்கபட்ட நினைவுச்சின்னங்களும் வைத்திய அத்தியட்சகரினால் வழங்கி வைக்கப்பட்டது.
இவ் வருடத்திற்கான உலக நோயாளர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு உலக சுகாதார ஷ்தாபனத்தினால்
Slogan
" Act now for safe and respectful childbirth"
Theme
" Safe motherhood and Newborn care"
என்று அறிவிக்கபட்டமை குறிப்பிடத்தக்கது.