மருத்துவமனை உபகரணங்கள் நன்கொடையாக இன்று (26) ஞாயிற்றுக்கிழமை பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு வழங்கி வைக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற ''விபக்ஷயே ஹுஸ்மக் ' நிகழ்ச்சித் திட்டத்துக்கு ஒருங்கிணைவாக ஆரோக்கியமான நாட்டைக் கட்டியொழுப்பும் நோக்கில் நடைமுறைப்படுத்தும் "ஜன சுவய" கருத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் சமூக நலத்திட்டத்தின் 28 வது கட்டமாக மருத்துவமனை உபகரணங்கள் நன்கொடையாக பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு கெளரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களினால் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இதற்கமைவாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களினால் பன்னிரெண்டு இலட்சத்து இருபத்தையாயிரம் ரூபா (ரூ1,225,000) பெறுமதி வாய்ந்த High Flow Oxygen Unit இயந்திரமொன்று, ஆறு இலட்சம் ரூபா (ரூ. 600,000) பெறுமதி வாய்ந்த 5 Function ICU Bed இயந்திரமொன்று மற்றும் பன்னிரெண்டு இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த (1,2000,000) Defibrillator இயந்திரமொன்று இவ்வாறு பொத்துவில் தள மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் மொகமட் றியாஸ் அவர்களிடம் வழங்கப்பட்டதுடன் அம்பாறை மாவட்டத்தின் ஐக்கிய மக்கள் சக்தி தொகுதி அமைப்பாளர் ஹசன் அலி, அதன் இணை அமைப்பாளர் கயான் தர்ஷன, லாஹுகல பிரதேச சபை உறுப்பினர் பாட்டலி ரோஹண கயந்த லாஹுகல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஆர். சந்திரசேன உட்பட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கட்சி தலைமைக்கும், இளைஞரணி தவிசாளர் பாராளமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க அவர்களும் அம்பாறை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி இளைஞரணி கோடான நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.