கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணொருவர் உயிருடன் மீட்பு

அம்பாறை, தமன, சீனவத்த பிரதேசத்திலுள்ள வீதியொன்றில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணொருவர் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த 27 ஆம் திகதி தனது மகள் கடத்தப்பட்டதாக, குறித்த பெண்ணின் தாய், வென்னப்புவ கந்தானகெதர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில், நேற்று (08) காலை குறித்த பெண், கை, கால்கள் கட்டப்பட்டு வீதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட குறித்த பெண் சிகிச்சைகளுக்காக அம்பாறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



நன்றி - தமிழன்

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணொருவர் உயிருடன் மீட்பு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணொருவர் உயிருடன் மீட்பு Reviewed by Editor on September 09, 2021 Rating: 5