ஐந்து நிமிடங்கள் மாத்திரம் தவிசாளராக இருந்த இஸ்ஸதீன்

மன்னார் பிரதேச சபைக்கான புதிய தவிசாளர் தெரிவு இன்று (29) புதன்கிழமை காலை இடம்பெற்றது, இதில் இஸ்மாயில் இஸ்ஸதீன் என்பவர் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டு சில நிமிடங்ளில் பின்னர் நிதிமன்ற தடை உத்தரவு வெளியாகியது.

மன்னார் பிரதேச சபை முன்னாள் தவிசாளரான முஜாஹிர் அவர்களின் இடைநிறுத்தம் மற்றும் உறுப்புரிமை நீக்கத்துக்கு எதிராக, கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் ( Writ) மனுவை இன்று (29) விசாரித்த நீதிமன்றம், புதிய தவிசாளரை வர்த்தமானப்படுத்த தடைசெய்யும் தடையுத்தரவை பிறப்பித்து தீர்ப்பளித்ததினால் இவர் சிறிது நேரமே தவிசாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



ஐந்து நிமிடங்கள் மாத்திரம் தவிசாளராக இருந்த இஸ்ஸதீன் ஐந்து நிமிடங்கள் மாத்திரம் தவிசாளராக இருந்த இஸ்ஸதீன் Reviewed by Editor on September 29, 2021 Rating: 5