யாழ். தாளையடி உபதபால் நிலையமானது, தபால் நிலையமாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான ஆவணத்தை இன்று (09) வியாழக்கிழமை யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கெளரவ நாமல் ராஜக்ச அவர்கள் வழங்கி வைத்தார்.
இதற்கான முன்மொழிவை பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
உபதபால் நிலையம் தபால் நிலையமாக தரமுயர்வு
Reviewed by Editor
on
September 09, 2021
Rating: