பள்ளிவாசல் முஸ்லிம் நிறுவன சம்மேளனத்தின் உதவியுடன் நிதியுதவி

(முஹம்மட் அஸ்மி)

ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் மூலமாக நோயாளிகள்  மற்றும் தேவையுடைய ஏழைகளின் நலன்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதற்காக அமைக்கப்பட்ட நிதி உதவி குழுவின் செயற்பாடுகள் ஆரம்பமாகி தற்போது முன்னெடுக்கப்படுகிறது.

அந்தவகையில் ஏறாவூர் மீராகேணி தபால் நிலைய வீதியை சேர்ந்த மிகவும் வறுமையால் பாதிக்கப்பட்ட குடும்பஸ்த்தர் ஒருவர் தனது மீன் வியாபாரத்தை முன்னெடுப்பதற்காக ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேனத்திடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக அவருக்கு தேவையான ஆரம்ப முதலாக இருந்த ஐந்தாயிரம் ரூபாயினை இன்று (13) திங்கட்கிழமை சம்மேளனத்தின் நிதி உதவிக் குழுவினர் வழங்கி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.




பள்ளிவாசல் முஸ்லிம் நிறுவன சம்மேளனத்தின் உதவியுடன் நிதியுதவி பள்ளிவாசல் முஸ்லிம் நிறுவன சம்மேளனத்தின் உதவியுடன் நிதியுதவி Reviewed by Editor on September 13, 2021 Rating: 5