இன மதங்களுக்கு அப்பால் சேவையாற்றும் சமூக சேவையாளர் பைஸல்

(இர்ஷாத் இமாதீன்)

இளம் தொழிலதிபரும் சமூக சேவையாளருமான எம்.பைஸல் அவர்கள் இன பேத மற்று பல பிரதேசங்களிலும் சமூக சேவையை முன்னெடுத்து வருகிறார்.

அந்த வகையில் தம்பலகாம பிரதேசத்தில் கொவிட் அசாதாரண சூழ்நிலையினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தம்பலகம் பிரதேச மக்களுக்கு தனது உதவித் திட்டத்தை இன்று (16) வியாழக்கிழமை ஆரம்பித்து வைத்தார்.

பல்லின சமூகக் கட்டமைப்பில் இனங்களுக்கிடையிடையிலான சக வாழ்வு மூலமே நாட்டில் சுபிட்சத்தை ஏற்படுத்த முடியும் என ஆழமாக நம்பும் முற்போக்கு சிந்தனையுடைய சமூக செயற்பாட்டாளராக இவர் திகழ்கிறார்.இவரின் அண்மைக்கால சமூகப் பணிகள் அதனையே வெளிப்படுத்தி நிற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.







இன மதங்களுக்கு அப்பால் சேவையாற்றும் சமூக சேவையாளர் பைஸல் இன மதங்களுக்கு அப்பால் சேவையாற்றும் சமூக சேவையாளர் பைஸல் Reviewed by Editor on September 16, 2021 Rating: 5