ஆசிரியர் ஜலால்தீன் அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு

(றிஸ்வான் சாலிஹு)

அக்கரைப்பற்று ‌சேர் ராசிக் பரீட்  வித்தியாலயத்திலிருந்து 32 வருட ஆசிரியர் சேவையைப் பூர்த்தி செய்து ஓய்வு பெற்றுச் செல்லும் ஆசிரியர் எம்.சி.ஜலால்தீன் அவர்களை வாழ்த்தி வழியனுப்பும் பிரியாவிடை நிகழ்வு இன்று (23) வியாழக்கிழமை பாடசாலை அதிபர் ஜனாப். அப்துர் றஹீம் பாடசாலையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், இப்பாடசாலையின் EPSI இணைப்பாளர் ஜனாப் என்.ரீ.நாசர், அக்கரைப்பற்று அஸ்-ஸிராஜ் கனிஷ்ட கல்லூரியின் அதிபர் ஜனாப்.எஸ். றினோஸ்டீன் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.






ஆசிரியர் ஜலால்தீன் அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு ஆசிரியர் ஜலால்தீன் அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு Reviewed by Editor on September 23, 2021 Rating: 5