இராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ள இராஜாங்க அமைச்சர்

சிறைச்சாலை மேலாண்மை இராஜாங்க அமைச்சர் லோகன் ரத்வத்த சற்று முன்னர் (புதன்கிழமை 15) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அதற்கான தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அவர் அனுப்பியுள்ளதோடு, இக்கடித்தத்தை ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைதிகளை அச்சுறுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் உடனடியாக தனது அமைச்சை இராஜினாமா செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வேண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




இராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ள இராஜாங்க அமைச்சர் இராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ள இராஜாங்க அமைச்சர் Reviewed by Editor on September 15, 2021 Rating: 5