ஜனாதிபதியிடம் இருந்து நியமனக் கடிதம் பெற்ற புதிய ஆளுனர்

இலங்கை மத்திய வங்கியின் 16ஆவது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ரால் அவர்கள், இன்று (15) புதன்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடமிருந்து, தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். 

பிரசித்திபெற்ற பட்டயக் கணக்காளரான அஜித் நிவாட் கப்ரால் அவர்கள், இதற்கு முன்னர் அமைச்சின் செயலாளராகவும் சுமார் 9 மாதக் காலப்பகுதி வரையில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிகழ்வில், ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர அவர்களும் கலந்துகொண்டிருந்தார் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஜனாதிபதியிடம் இருந்து நியமனக் கடிதம் பெற்ற புதிய ஆளுனர் ஜனாதிபதியிடம் இருந்து நியமனக் கடிதம் பெற்ற புதிய ஆளுனர் Reviewed by Editor on September 15, 2021 Rating: 5