தனியார் மருத்துவமனையில் கைக்குண்டு மீட்பு, பொலிஸ் விசாரணை ஆரம்பம்

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியாலை ஒன்றின் முதலாவது மாடியில் உள்ள மலசல கூடத்தில் கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்த பொலிசார் அங்கு விரைந்து சோதனை நடத்தி கைக்குண்டை மீட்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.ரி.வி. காட்சிகளை சோதனை செய்து பொலிசார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




தனியார் மருத்துவமனையில் கைக்குண்டு மீட்பு, பொலிஸ் விசாரணை ஆரம்பம் தனியார் மருத்துவமனையில் கைக்குண்டு மீட்பு, பொலிஸ் விசாரணை ஆரம்பம் Reviewed by Editor on September 14, 2021 Rating: 5