ஷைகுல் பலாஹ் கல்வி மைய்யத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

(எம்.எஸ்.எம்.நூர்தீன்)

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் ஷைகுல் பலாஹ் கல்வி மைய்யத்திற்கான அடிக்கல் இன்று (20) புதன்கிழமை காலை நாட்டப்பட்டது.

இந்த வைபவம் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன நலன்புரி அமைப்பின் தலைவர் மௌலவி எம்.மன்சூர் தலைமையில் நடைபெற்றது.

இதில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் மௌலவி எம்.ஐ.ஆதம்லெவ்வை, காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி எம்.எஸ்.ஹாறூன் மட்டக்களப்பு மாவட்ட ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி உட்பட காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதி நிதிகள், காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் பிரதி நிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன நலன்புரி நடவடிக்கைகளுக்காக ஷைகுல் பலாஹ் கல்வி மைய்யத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.









ஷைகுல் பலாஹ் கல்வி மைய்யத்திற்கான அடிக்கல் நாட்டு விழா ஷைகுல் பலாஹ் கல்வி மைய்யத்திற்கான அடிக்கல் நாட்டு விழா Reviewed by Editor on October 20, 2021 Rating: 5