மீலாதுன் தினத்தையொட்டி பதுர் ஜும்ஆ பள்ளிவாசலில் மரநடுகை நிகழ்வு

(றிஸ்வான் சாலிஹு)

உத்தம நபியின் உதய தினமான நேற்று (19) செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணியளவில் அக்கரைப்பற்று பதுர் ஜூம்ஆ பள்ளிவாசலில் மெளலீது தமாமும், மர நடுகை நிகழ்வும் பள்ளிவாசல் தலைவர் யூ.எல். செய்னுலாப்தீன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மரநடுகை நிகழ்வில் அதிதிகளாக நகர்ப்பிரிவு-05 கிராம உத்தியோகத்தர் ஜனாப் ஏ.எஸ்.ஹஸ்பி, ஓய்வு பெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஜனாப். நவாஸ், பதுர் நகர் வட்டாரத்தலைவர் ஜே.ஜூம்றத், திரு.பரமானந்தன் குகன், பள்ளிவாசல் பேஷ் இமாம் மெளலவி எம்.ஐ.பைசல் (ஷஹ்வி), மெளலவி பீ.எம்.அர்சாத் (சித்தீகி) ஆகியோரும், பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் அல்-மத்ரஸத்துல் பத்ரிய்யா மாணவர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வினைத் தொடர்ந்து, மெளலீது சரீப் ஓதப்பட்டு, மெளலவி ஏ.எல்.ஐயூப் (யூசுபி) அவர்களினால் மார்க்க சொற்பொழிவு நடாத்தப்பட்டு இறுதியில் துஆ பிரார்த்தனையுடன் முடிவுற்ற இந்நிகழ்வுகள் அனைத்தையும், பள்ளிவாசல் செயலாளர் ஏ.எல்.எம்.அனஸ் ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.











மீலாதுன் தினத்தையொட்டி பதுர் ஜும்ஆ பள்ளிவாசலில் மரநடுகை நிகழ்வு மீலாதுன் தினத்தையொட்டி பதுர் ஜும்ஆ பள்ளிவாசலில் மரநடுகை நிகழ்வு Reviewed by Editor on October 20, 2021 Rating: 5