(சமூர்டீன் நெளபர்)
அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் விஷேட வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் நாடுதழுவிய ரீதியில் மேற்கொள்ளப்படுகின்ற ஒரு இலட்சம் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தினூடாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களிடம் அப்பகுதி மக்கள் விடுத்த வேண்டுகோளை அடுத்து முல்லைத்தீவு நல்லதண்ணி ஓடை பகுதிக்கான 1.4Km நீளமான காபட் வீதி புனரமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு உத்தியோகப்பூர்வமாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினரினால் வெள்ளிக்கிழமை (15) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊர்மக்கள், ஆதரவாளர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.