(றிஸ்வான் சாலிஹு)
அக்கரைப்பற்று- முதலாம் குறிச்சி டீன்ஸ் வீதியில் (மிஸ்பா பள்ளிவாசல் அருகாமை) வசிக்கும் ஜனாப்.முர்ஷித் என்பவரின் அன்பு மகன் முகம்மட் என்ற ஒன்றரை வயது குழந்தை நேற்று (15) வெள்ளிக்கிழமை இவ்வுலகை விட்டு பிரிந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
குழந்தையுடன், இக்குழந்தையின் தாய் தனது குடும்ப உறுப்பினர் ஒருவரின் வீட்டுக்கு செல்வதற்காக ஆயத்தமான வேளையில் யாரும் எதிர்பாராத வகையில் இக்குழந்தை வீட்டின் மாடிப்படியில் ஏறி, சறுக்கி வீழ்ந்ததில் குழந்தையின் பின் தலை பக்கத்தில் ஏற்பட்ட படுகாயம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அந்த சின்ன சிறு குழந்தை உயிரிழந்தது.
இந்த குழந்தையின் திடீர் மரணத்தால் அப்பகுதி மக்கள் பெரும் கவலையுடனும், ஆழ்ந்த துயரத்துடனும் இருப்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த குழந்தை மற்றும் அவருடைய பெற்றோருக்குமாக துஆ செய்து கொள்வோம்.