காத்தான்குடியில் இடம்பெற்ற கோர விபத்து

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதான வீதியில் இன்று (26) செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற வாகன விபத்தில் லொறி, முச்சக்கர வண்டி மற்றும் நான்கு மோட்டார் சைக்கிள்கள் என்பன சேதமடைந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

மட்டக்களப்பிலிருந்து வந்த சிறிய லொறியொன்று காத்தான்குடி மட்டக்களப்பு பிரதான வீதியிலுள்ள எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மற்றும் நான்கு மோட்டார் சைக்கிள் என்பவற்றுடன் மோதியுள்ளது. குறித்த லொறி முச்சக்கர வண்டியில் மோதுண்டதுள்ளதுடன் அவ்விடத்திலுள்ள மர ஆலையொன்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லையென காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த காத்தான்குடி பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தமை குறிப்பிடத்தக்கது.









காத்தான்குடியில் இடம்பெற்ற கோர விபத்து காத்தான்குடியில் இடம்பெற்ற கோர விபத்து Reviewed by Admin Ceylon East on October 26, 2021 Rating: 5