அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற பிாியாவிடை வைபவம்

(ரீ.கே.றஹ்மத்துல்லாஹ்)

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக 25 வருட காலம் சேவையாற்றி ஓய்வு பெற்றுச் சென்றுள்ள எஸ்.எல்.எம். இப்றாஹிம் மற்றும் எஸ்.எல். ஐன்பியா ஆகியோருக்கான பிரியாவிடை வைபவம்  அட்டாளைச்சேனையில் செவ்வாய்க்கிழமை (26) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அகமட் ஸாபீர் கலந்து சிறப்பித்தார்.

நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் ஆர்.எம்.நழீல் கௌரவ அதிதியாக கலந்து கொண்டதுடன் சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் எம்.ஜே.எம்.நிஹ்மத்துல்லா, கருத்திட்ட முகாமையாளர் என்.ரீ. மசூர், முகாமைத்துவப் பணிப்பாளர் ஐ.ஓ. நபீசா, சமுர்த்தி வங்கி முகாமையாளர்களான எம்.ஏ.இமாமுதீன், எம்.எல்.ஜாபீர் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில், ஓய்வு பெற்றுச் சென்றுள்ள உத்தியோகத்தர்களுக்கு பிரதம அதிதியினால் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் மரணமடைந்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்காக பிரார்த்தனையும் இடம்பெற்றது.





அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற பிாியாவிடை வைபவம் அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற பிாியாவிடை வைபவம் Reviewed by Admin Ceylon East on October 27, 2021 Rating: 5