திருமண தம்பதியினர் செய்த செயல்

தங்களது திருமணத்திற்காக சேமித்த 20 லட்சம் ரூபாய் பணத்தை, வறுமையில் வாழும் குடும்பம் ஒன்றுக்கு வீடு கட்டி கொடுத்த மாத்தறை, அக்குரெஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த இளைஞனும் தனது காதலியும் எடுத்த இந்த தீர்மானத்தை பலரும் பாராட்டியுள்ளார்கள்.

குறித்த இளைஞன் மக்கள் வங்கியில் பணியாற்றுகின்ற நிலையில் காதலி ஆயுர்வேத வைத்தியராக பணியாற்றுகின்றார்.

தென் மாகாணத்தில் உள்ள பிரபல ஹோட்டலில் இந்த இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதற்கு இரண்டு குடும்பத்தினரும் தீர்மானித்திருந்தனர். இருந்தாலும் ஒரு நாள் கொண்டாட்டத்திற்காக பிரம்மாண்டமாக திருமணம் செய்து பணத்தை வீணடிப்பதற்கு பதிலாக வறுமையிலுள்ள குடும்பம் ஒன்றிற்கு உதவுவதற்கு இருவரும் தீர்மானித்துள்ளனர்.

அதற்கமைய கணவனை இழந்த 3 பிள்ளைகளின் தாய் ஒருவருக்கு வீடு ஒன்றை நிர்மாணித்து கொடுப்பதற்கான நடவடிக்கையை எடுத்ததன் பயனாக கடந்த 2 மாதங்களுக்கு முன் தங்கள் திருமணத்திற்காக சேமித்த பணத்தை கொண்டு இந்த வீட்டை நிர்மாணிக்க அவர்கள் ஆரம்பித்துள்ளார்கள்.

அதனடிப்படையில் கடந்த புதன்கிழமை (20) இந்த வீடு நிர்மாணிக்கப்பட்டு குறித்த குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு,இறைவன் மனித வடிவில் இருப்பதனை தற்போதே பார்க்கின்றேன் என வீட்டில் குடியேறிய பெண் தெரிவித்துள்ளமை, அந்த தம்பதியினரை பெரும் சந்தோஷத்திற்குட்பட்டுள்ளது.





திருமண தம்பதியினர் செய்த செயல் திருமண தம்பதியினர் செய்த செயல் Reviewed by Editor on October 24, 2021 Rating: 5