பள்ளிவாசல் காரியாலய கட்டிடம் நாடாளுமன்ற உறுப்பினரால் திறந்து வைப்பு

வெண்கல செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வாழவைத்த குளம் பகுதியில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியிலிருந்து வாழவைத்த குளம் தௌஹீத் ஜும்மா பள்ளிவாசலில் நிர்மாணிக்கப்பட்ட காரியாலய கட்டிடத்தை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நேற்று (15) வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

செட்டிக்குள பிரதேச சபை தவிசாளர் திரு. ஜெகதீஸ்,  அல்ஹிமா  தொண்டு நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷேய்க். நூருல்லாஹ் (நளீமி) , அத்-தைபா மனிதாபிமான நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷேய்க். ரிஸ்வான் (மதனி), பரயனாலன் குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் உலமாக்கள்,  பள்ளி பரிபாலன சபை உறுப்பினர்கள்,  ஊர் மக்கள் எனப் பலரும் இந்த திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.






பள்ளிவாசல் காரியாலய கட்டிடம் நாடாளுமன்ற உறுப்பினரால் திறந்து வைப்பு பள்ளிவாசல் காரியாலய கட்டிடம் நாடாளுமன்ற உறுப்பினரால் திறந்து வைப்பு Reviewed by Editor on October 16, 2021 Rating: 5