இளைஞர்களை தாக்கிய பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த நிலை

ஏறாவூர் பிரதேசத்தில் நேற்று (22) வெள்ளிக்கிழமை இரு இளைஞர்கள் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரி ஒருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

இவ்விரு இளைஞர்களையும் பொலிஸ் அதிகாரி தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ளது.

மோட்டார் வண்டியில் பயணித்தவர்களை பொலிஸார் நிறுத்தியபோதும் அதனைப் பொருட்படுத்தாமல்  மோட்டார் சைக்கிளில் சென்றதாலேயே, இவர்களை பொலிஸ் அதிகாரி தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.



இளைஞர்களை தாக்கிய பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த நிலை இளைஞர்களை தாக்கிய பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த நிலை Reviewed by Editor on October 23, 2021 Rating: 5