விளையாட்டு துறையில் தேசிய மட்டத்திற்கு வீரர்களை கொண்டு செல்வதற்கான செயற்திட்டம்

தேசிய இளைஞர் மன்றத்தினால் மன்னார் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராம மட்டத்திலிருந்தும் இளைஞர், யுவதிகளின் விளையாட்டு திறமைகளை கண்டறிந்து அவர்களை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் திறமையான வீர வீராங்கனைகளை தெரிவு செய்யும் நிகழ்வு இன்று (17) மன்/ புனித சவேரியர் ஆண்கள் தேசிய பாடசாலை மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ .காதர் மஸ்தான் அவர்கள் நிகழ்வுகளை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைத்தார். 

இந்நிகழ்வில் இளைஞர் சேவை மன்றத்தின் நிர்வாக மற்றும் நிதிப் பணிப்பாளர் டபிள்யூ.மனுல சமல் பெரேரா, இளைஞர் சேவை மன்றத்தின் வட மாகாணப் பணிப்பாளர் ஏ. அமீர், தனியார் தொண்டு நிறுவனத்தின் பணிப்பாளர்  ஜனாப். மிஹ்லார் உள்ளிட்ட இளைஞர் கழக உறுப்பினர்கள், விளையாட்டு கழக வீரர்கள் உள்ளிட்ட பலரும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.







விளையாட்டு துறையில் தேசிய மட்டத்திற்கு வீரர்களை கொண்டு செல்வதற்கான செயற்திட்டம் விளையாட்டு துறையில் தேசிய மட்டத்திற்கு வீரர்களை கொண்டு செல்வதற்கான செயற்திட்டம் Reviewed by Editor on October 17, 2021 Rating: 5