கொவிட் தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கையில் ஈடுபட்ட சுகாதார பிரிவினருக்கு சுகாதார அமைச்சினால் பாராட்டு

(றிஸ்வான் சாலிஹு)

கொவிட்- 19 தொற்றை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் வைத்து சாதனை புரிந்த சகல சுகாதார பிரிவினரை சுகாதார அமைச்சு பாராட்டியுள்ளது.

அதனடிப்படையில் கொவிட் -19 தொற்றை அக்கரைப்பற்று சுகாதார பிரிவுக்குள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் வைத்து சாதனை படைத்த  அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதார பரிசோதர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கும் இந்த பாராட்டு கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்த சாதனை பாராட்டு கிடைப்பதற்கு சகல வழிகளிலும் ஆலோசனை வழங்கிய கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ.சுகுணன், அக்கரைப்பற்று மாநகர சபை, பிரதேச செயலகம், ஆதார வைத்தியசாலை, அதிலும் குறிப்பாக அக்கரைப்பற்று அனர்த்த முகாமைத்துவ குழு ஆகியோர்களுக்கு தனது தனிப்பட்ட மற்றும் பணிமனை சார்பாக நன்றியினை தெரிவிப்பதாக அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எப்.எம்.ஏ.காதர் தெரிவித்துள்ளார்.

இப்பாராட்டு கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்குட்பட்ட சகல சுகாதார வைத்திய அதிகாரிகள், சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், உத்தியோகத்தர்கள், சுகாதார ஊழியர்கள் அனைவருக்கும் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.




கொவிட் தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கையில் ஈடுபட்ட சுகாதார பிரிவினருக்கு சுகாதார அமைச்சினால் பாராட்டு கொவிட் தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கையில் ஈடுபட்ட சுகாதார பிரிவினருக்கு சுகாதார அமைச்சினால் பாராட்டு Reviewed by Editor on October 17, 2021 Rating: 5