(இர்ஷாத் இமாதீன்)
கிண்ணியா மற்றும் தம்பலகமம் பிரதேசத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்களுடன் சமூக மேம்பாடு மற்றும் அபிவிருத்தி தொடர்பிலான கலந்துரையாடலொன்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் மகளிர் அணித் தலைவி ரைஷா மஹ்ரூபின் இல்லத்தில் இன்று (03) மாலை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் பெண்களின் கல்வி முன்னேற்றம், சுய தொழில் வாய்ப்பு, பெண்களின் பாதுகாப்பு உட்பட மக்கள் சமூக நலன் சார்ந்த பல விடயங்கள் பேசப்பட்டதுடன், பிரதேச சமூக அபிவிருத்தி, கல்வி மேம்பாடு, சுகாதார நலன் விளையாட்டுத்துறை வளர்ச்சி, பிரதேசத்துக்கான அபிவிருத்தித் திட்டங்கள் என பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
எதிர்கால அபிவிருத்தி தொடர்பிலான கலந்துரையாடல்
Reviewed by Admin Ceylon East
on
October 03, 2021
Rating: