(அஸ்ரி இப்னு அமீர்)
அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாகாமம் வயல் வெளிப் பகுதியில் மின்னல் தாக்கி விவசாயி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்த அனர்த்தமானது நேற்று (05) சாகாமம் பெரியதலாவை வயல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் சாகாமம் பாடசாலை வீதியைச் சேர்ந்த 52வயதுடைய 6 பிள்ளைகளின் தந்தையான தம்பிமுத்து மோகனராசா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மின்னல் தாக்கி விவசாயி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழப்பு
Reviewed by Editor
on
October 05, 2021
Rating: