ஜனாதிபதியின் உலக ஆசிரியர் தின வாழ்த்து செய்தி

இன்று உலக ஆசிரியர் தினம்.  பிள்ளைகளை நல்லொழுக்கமுள்ள, பண்பான மற்றும் அறிவுள்ள குழந்தையாக மாற்றி தெளிவான எதிர்காலத்தை நோக்கி  வழிகாட்டி பிள்ளைகளை சமூகமயமாக்கும் பணியை பெற்றோருக்கு அடுத்த ஸ்தானத்தில் இருந்து ஆசிரியரே செய்கிறார்.

இத்தகைய பெருமைக்குரிய மற்றும் கௌரவமான தொழிலில் ஈடுபட்டுள்ள உங்கள் அனைவருக்கும் இன்று எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதோடு அறிவு, ஞானம் மற்றும் ஒழுக்கத்துடன் மேலும் பல குழந்தைகளை உருவாக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன் என்று அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச வெளியிட்டுள்ள ஆசிரியர் தின வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.



ஜனாதிபதியின் உலக ஆசிரியர் தின வாழ்த்து செய்தி ஜனாதிபதியின் உலக ஆசிரியர் தின வாழ்த்து செய்தி Reviewed by Admin Ceylon East on October 05, 2021 Rating: 5