ஊடகவியலாளர் பைஷல் இஸ்மாயில் தொகுத்து வழங்கிய " நோயும் தீர்வும்" நூலின் பிரதியொன்றினை இந்திய திருச்சியைச் சேர்ந்த ஊடகவியலாளர் எம்.கே.ஷாகுல் ஹமீட் இலங்கை வந்து கல்முனை பிரதேசத்திற்கு விஜயம் செய்த போது சாய்ந்தமருது சீ பிரீஸ் சுற்றுலா விடுதியில் வைத்து அவருக்கு இன்று (22) வெள்ளிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
இந்நூல் வழங்கி வைக்கும் நிகழ்வில் சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ.மஜீத், பொருளாளர் நூருல் ஹுதா உமர், பிரதித் தலைவர் எஸ்.அஷ்ரஃப் கான், செயற்குழு உறுப்பினர்களான ஏ.எல். நயீம், எம்.என்.எம்.அப்றாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நூல் சிலோன் மீடியா போரத்தினால் வெளியிட்டு வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
ஊடகவியலாளர் பைஷல் இஸ்மாயிலின் நூல், இந்திய ஊடகவியலாளருக்கு வழங்கி வைப்பு
Reviewed by Admin Ceylon East
on
October 22, 2021
Rating: