சகல பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளும் ஆரம்பம்

கொரோனா பரவல் காரணமாக சுமார் 06 மாதங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த நாட்டிலுள்ள சகல பாடசாலைகளின் ஆரம்ப பிரிவு வகுப்புகளையும், மீள திறக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில், எதிர்வரும் திங்கட்கிழமை (25) முதல் ஆரம்பப் பிரவு வகுப்புகளுக்கான கற்பித்தல் செயற்பாடுகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பெரேரா கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

அத்தோடு ஏனைய வகுப்புகளை ஆரம்பிப்பது தொடர்பான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளதோடு, மீண்டும் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு சகல தரப்பினரும் பூரண ஒத்துழைப்பை வழங்குமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.






சகல பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளும் ஆரம்பம் சகல பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளும் ஆரம்பம் Reviewed by Editor on October 22, 2021 Rating: 5