(றிஸ்வான் சாலிஹு)
அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதியில் இதுவரை கொவிட் -19 தடுப்பூசி போடாத 20 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இரண்டாம் ஊசிக்காக காத்திருப்பவர்கள் நாளை (02) காலை 8:30 முதல் 12 மணி வரை அக்கரைப்பற்று பதுர் நகர் சுகாதார நிலையத்தில் "சினொபாம்" கொவிட் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எப்.எம்.ஏ.காதர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், இச்சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி பயன்பெறுவதோடு, தங்களது உறவுகளை நேசிக்கும் ஒவ்வொரு ஜீவனும் தங்கள் குடும்பங்களிலுள்ளவர்களை தடுப்பூசி போட்டுக் கொள்ள வழிவகை செய்து கொள்ள உதவுமாறும் சுகாதார வைத்திய அதிகாரி பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
அக்கரைப்பற்றில் கொவிட் தடுப்பூசி பெறதாவர்களுக்கான மற்றுமொரு சந்தர்ப்பம்
Reviewed by Admin Ceylon East
on
October 01, 2021
Rating:
![அக்கரைப்பற்றில் கொவிட் தடுப்பூசி பெறதாவர்களுக்கான மற்றுமொரு சந்தர்ப்பம்](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiuMtUX_0Q3a92zm3v7wj7bJCwMKyECCMEXx4cn-P_HCOEJtLaRfkhECqh06DeZhMxSo_hFmL3zQ0HF6kNy-p9uTvi3A75-TGG5rPxRVqgpmbHWo3V3a0qYNTBXyxhbdYZT8nkktPIsJtc/s72-c/COVID-19-Vaccine-1.jpg)