(றிஸ்வான் சாலிஹு)
தற்போது நாடு முழுவதும் 2020.12.31 வரை பதிவு செய்யப்பட்ட பிறப்பு, இறப்பு, திருமண, விவாகரத்து சான்றிதழ்கள் ஒன்லைனில் (Online) பதிவேற்றம் செய்யும் பொருட்டு, ஸ்கேன்னிங் (scanning) செய்யும் நடவடிக்கைகள் கொழும்பிலுள்ள பதிவாளர் நாயகம் தலைமையகத்தில் இடம்பெறுகின்றன.
அதன் ஓர் அங்கமாக அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் காணப்படும் 2009 தொடக்கம் 2021 வரையான காலப்பகுதியினுள் பதிவு செய்பட்ட பிறப்பு, இறப்பு, திருமண, விவாகரத்து சான்றிதழ்கள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
எனவே, குறித்த சான்றிதழ்கள் மீள எமது அலுவலகத்திற்கு கிடைக்கப்பெறும் வரை, 2009 தொடக்கம் 2021 வரையான காலப்பகுதியினுள் பதிவு செய்பட்ட பிறப்பு, இறப்பு, திருமண, விவாகரத்து சான்றிதழ்கள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என்று அக்கரைப்பற்று பிரதேச செயலக மேலதிக மாவட்ட பதிவாளர் ஜனாப். ஷாமில் மௌலானா தெரிவித்துள்ளார்.