சியம்பலாண்டுவ சிறி விஜிதராமே விஹாரையின் விகாரதிபதி சங்கைக்குரிய கம்மானந்தே தேரர் மற்றும் இன்னும் சில சங்கைக்குரிய பௌத்த மதகுருக்கள் இன்று (17) ஞாயிற்றுக்கிழமை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ எஸ்.எம்.எம். முஷாரப் அவர்களை அவரது இல்லத்திற்கு விஜயம் செய்து சந்தித்தனர்.
விகாரையில் நிலவும் குறைபாடுகள், உட்கட்டமைப்பு வசதி போன்ற பிரச்சினைகளை எத்திவைத்து அதற்கான தீர்வுகளை பெற்றுத்தருமாறு கோரியதுடன், அவற்றை தீர்த்து தருவதாக பாராளுமன்ற உறுப்பினர் உறுதியளித்தார்.
பாராளுமன்ற உறுப்பினரின் சமகால இன நல்லுறவு முன்னெடுப்புக்களை தாம் அவதானித்து திருப்தியுற்றே இன்று விஜயம் செய்ததாகவும், தொடர்ந்தும் பாராளுமன்ற உறுப்பினரின் எதிர்கால நகர்வுகளுக்கு தாம் ஆசியும் ஆதரவும் வழங்க தயார் எனவும் விகாராதிபதி மகிழ்ச்சியுடன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.