(றிஸ்வான் சாலிஹு)
அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் அஷ்ஷேக் ரீ.எம்.எம்.அன்சார் பிரதேச செயலாளரின் எண்ணக்கருவில் உரித்தான பொது மக்கள் சேவைப் பணியகம் (Public Service Bureau) அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக பிரதேச செயலாளரினால் இன்று (21) வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
தங்களது தேவைகளை நிறைவேற்ற பிரதேச செயலகம் நாடி வரும் பொதுமக்கள் ஒரே இடத்தில் சகல விதமான சேவைகளையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற உன்னத நோக்கத்தை நிறைவு செய்வதற்காக பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையிலான உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் இந்த நிலையம் உருவாக்கப்பட்டு தினமும் திருப்திகரமாக இந்த பணிகள் முன்னெடுக்கப்படுகிறது.
வாகன உரிமை மாற்றம், அனுமதிப்பத்திரங்கள் வழங்கல், சமூக நல சேவைகள், காணி, ஓய்வூதியம், பிறப்பு இறப்பு திருமண சான்றிதழ், சிறப்பர் மற்றும் வாகன வருமான உத்தரவுப்பத்திரம் போன்ற நாளாந்த சேவைகள் ஒரே இடத்தில் வழங்கப்படுகிறது.
இந்நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.தமீம், கணக்காளர் எஸ்.எல்.சர்தார் மிர்ஸா, நிர்வாக உத்தியோகத்தர் எம்.எஸ்.பாரூக், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்.எச்.ஜெய்னுடீன், சமூக சேவை உத்தியோகத்தர் மற்றும் உத்தியோகத்தர்கள் ஊழியர்களும் கலந்து கொண்டார்கள்.