ஊவா மாகாண ஆளுநர் நிதியத்தின் மாதாந்த நிர்வாகக்குழு கூட்டம் ஆளுநர் ஏ.ஜே.முஸம்மில் தலைமையில், ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது மருத்துவ உதவி மற்றும் கல்வி உதவிகளுக்காக கிடைக்கப்பெற்றுள்ள கோரிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், அவற்றில் சிலவற்றை எதிர்காலத்தில் வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
ஆளுநர் நிதியத்தினை மேலும் பலப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர் எம். எம். விஜயநாயக, பிரதி பிரதான செயலாளர் ( நிதி ) எம்.ஈ. சுமித்ர சில்வா, பிரதி பிரதான செயலாளர் (திட்டமிடல்) ஆர்.எச்.சீ. பிரியந்தி உள்ளிட்ட ஊவா மாகாண ஆளுநர் நிதிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.