(சியாத் எம். இஸ்மாயில், பட உதவி -எஸ். மாதவன்)
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் 15 வருடங்களாக சுகாதார உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றுச்சென்ற வி.மேகநாதன் அவர்களை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு வைத்தியசாலை நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் தலைவர் டொக்டர் ஏ.சீ.அப்துல் றசாக் தலைமையில் கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் (16) நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக வைத்திய அத்தியட்சகர் டொக்டர் அஸாத். எம். ஹனிபா கலந்து கொண்டு பொன்னாடை, ஞாபகச்சின்னம், பணப்பரிசு என்பனவற்றை வழங்கிவைத்ததுடன், நலன்புரிச்சங்கத்தின் உப தலைவர் டொக்டர்.எம்.எச்.எம். சனூபர் மற்றும் திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி ஆக்கில் சரிபுத்தீன், சுகாதார மற்றும் தொற்று தடுப்பு பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர். எம்.ஏ.எம்.முபாரிஸ், தாதிய பரிபாலகர் பி.ரீ.நௌபர், செயலாளர் ஏ.பி. நூறுல்லாஹ், கதிர் இயக்கவியலாளர் எஸ்.ரீ.எம்.றஹ்மத்துல்லா, நலன்புரிச்சங்கத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.