கஞ்சா பயிரிடுவதன் மூலம் அந்நிய செலாவணியை ஈட்ட முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே இன்று (17) புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
டயானா கமகே மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
"2025 ஆம் ஆண்டளவில் கஞ்சாவுக்கான உலக சந்தை மதிப்பு $8.6 பில்லியன் முதல் $10.5 பில்லியன் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் பெரும்பாலான மருந்துவ பயிர்களை முறையாக பயிரிட்டு, ஏற்றுமதி செய்து, அந்நியச் செலாவணியைப் பெற முடியும் என்று அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
கஞ்சா பயிரிடுவதன் மூலம் அதிக அந்நிய செலாவணியை பெறலாம் - டயனா கமகே எம்.பி
Reviewed by Editor
on
November 17, 2021
Rating: