நீதி அமைச்சர் தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடல்

புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் பணியகத்தில் தற்போது ஆற்றப்படும் பணிகள் குறித்தும், அதன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் விசேட கலந்துரையாடல் கௌரவ நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அவர்களின் தலைமையில் சிறைச்சாலைகள் முகமைத்துவம் மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வளிப்பு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சில் இன்று (17) புதன்கிழமை இடம்பெற்றது.

சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வளிப்பு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் இளைப்பாறிய மேஜர் ஜெனரல் திரு வீ. ஆர். சில்வா, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் திரு தர்ஷன ஹெட்டி ஆரச்சி, சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வளிப்பு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சு மற்றும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் அலுவலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.




நீதி அமைச்சர் தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடல் நீதி அமைச்சர் தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடல் Reviewed by Editor on November 17, 2021 Rating: 5