நாட்டுக்குள் வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்- சஜித்

ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் நாட்டுக்குள் பிரவேசிக்கும் சாத்தியமுள்ளதால் வெளிநாட்டிலிருந்து வருகை தரும் பயணிகள் அனைவருக்கும்  பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (29) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டு வெளிநாட்டிலிருந்து வருகை தரும் பயணிகளும் இவ்வாறான பரிசோதனை களுக்கு உட்படுத்தப்பட வேண்டுமென வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சபையை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர்  தெரிவித்தார்.

தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களும் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகலாம் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளதாகவும், இந்த நேரத்தில் மரபணுப் பரிசோதனை மற்றும் கண்காணிப்புகளுக்கு முன்னு ரிமை வழங்குவது முக்கியம் என்றும் அவர் தெரிவித் துள்ளார்.

மேலும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை வழங்கியதற்காக அரசாங்கத்துக்கு நன்றி கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


(நன்றி - தினக்குரல்)


நாட்டுக்குள் வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்- சஜித் நாட்டுக்குள் வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்- சஜித் Reviewed by Editor on November 29, 2021 Rating: 5