(றிஸ்வான் சாலிஹு)
இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்பட்ட 33வது இளைஞர் விளையாட்டுப் போட்டி அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று (28) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று முடிவுற்றது.
இவ்விளையாட்டு போட்டியில் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட இளைஞர் கழகங்கள் குழு மெய்வல்லுநர் போட்டிகளில் சிறந்த முறையில் திறமைகளை வெளிக்காட்டி அக்கரைப்பற்று வரலாற்றில் 25 வருடங்களின் பின்னர் மைதான அனைத்து போட்டிகளிலும் வரலாற்றில் 25 வருடங்களுக்கு பின்னர் மாவட்ட மட்ட Overall Champion ஆக தெரிவாகியுள்ளது.
இதில் பங்குபற்றிய அனைத்து வீரர்களுக்கும் மற்றும் இதற்கான வழிகாட்டலை மேற்கொண்ட அக்கரைப்பற்று இளைஞர் சேவை அலுவலகர் எம்.எம் ஸமீலுல் இலாஹி அவர்களுகளும், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரி.எம் முஹம்மத் அன்சார் அவர்கள் வாழ்த்துவதுடன் தேசிய மட்டப் போட்டிகளிலும் வெற்றிகளை பெற அக்கரைப்பற்று பிரதேச செயலகம் சார்பாக தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக, பிரதேச செயலாளர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.