சர்வதேச ரீதியில் இயங்கி வரும் Global Wings Charity நிறுவனத்தின் இலங்கை கிளையானது, மகரகம அபேக்க்ஷா வைத்தியசாலைக்கு கொவிட் விடுதி ஒன்றை அண்மையில் நிர்மாணித்து கொடுத்துள்ளது.
இலங்கையின் பல பாகங்களில் மனிதாபிமான பணிகளில் அதாவது கல்வி , மருத்துவம் , வாழ்வாதாரம் போன்ற துறைகளில் இடர்படும் மக்களின் அபிவிருத்தியில் ஈடுபட்டு வரும் இந்த நிறுவனம் , தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டு வரும் புற்று நோயாளிகளுக்கான நன்மை கருதியே அவர்களுக்கென பிரத்தியேகமாக இந்த விடுதியை அமைத்துக் கொடுத்துள்ளது.
விளையாட்டுத துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கெளரவ நாமல் ராஜபக்ஸ அவர்களினால் இந்த விடுதி கடந்த 2021.11.09 ஆம் திகதி வைபவ ரீதியாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் Global Wings Charity நிறுவனத்தின் பணிப்பாளர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.