புத்தளத்தில் டொல்பின் வசந்தம் ஆரம்பம்

புத்தளம் கற்பிட்டி கடலில் டொல்பின் வசந்தம் ஆரம்பமாகியுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக டொல்பின் மீன்களை பார்க்கும் பருவமானது இம்முறை ஒரு மாதம் தாமதமாகவே ஆரம்பித்துள்ளது. எனினும் டொல்பின்களைப் பார்க்கும் பருவ காலம் இம்மாதம் முதல் அடுத்த வருட ஏப்ரல் மாத இறுதி வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பார்வையிடுபவர்கள் ஒரு சிறிய இயந்திர படகில் ஆறு பேர் மாத்திரமே சென்று பார்வையிட முடியும் என்பதோடு, இவைகளை 50 மீட்டர் தூரத்தில் இருந்து மட்டுமே பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.





புத்தளத்தில் டொல்பின் வசந்தம் ஆரம்பம் புத்தளத்தில் டொல்பின் வசந்தம் ஆரம்பம் Reviewed by Editor on November 18, 2021 Rating: 5