(றிஸ்வான் சாலிஹு)
அக்கரைப்பற்று முஸ்லிம் அரசினர் ஆண்கள் பாடசாலையின் புதிய அதிபராக ஜனாப். ஏ.எல்.செய்னுதீன் (அதிபர் தரம் -01) நியமிக்கப்பட்டு, அவர் தனது கடமையை இன்று (23) செவ்வாய்க்கிழமை பாடசாலையில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிமனையின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.ஏ.எஸ்.அஹமட் கியாஸ் முன்னிலையில் பொறுப்பேற்ற இந்நிகழ்வில், அக்கரைப்பற்று கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு. எம்.ஏ..கலீலுர் ரஹ்மான், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் திரு. எம்.எல்.றமீஸ், பிரதி அதிபர், ஆசிரியர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டு, புதிய அதிபரை வாழ்த்தி வரவேற்றார்கள்.
இப்பாடசாலையில் இதுவரை காலமும் அதிபராக கடமையாற்றிய எம்.எஸ்.ஏ. நயீம் அவர்கள் ஓய்வு பெற்று சென்றதன் காரணமாகவே, புதிய அதிபராக இவர் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.