இளைஞர்களின் தொழில் வாய்ப்புக்கான நேர்முக பரீட்சை

பாதுகாப்பு அமைச்சின் கீழ் தொழில்வாய்ப்பைப் பெற்றுக்கொள்ள ஆர்வமுள்ள (18 வயது தொடக்கம் 26 வயதுக்குக்குட்பட்ட ) இளைஞர்களுக்கான நேர்முக தேர்வு  எதிர்வரும் 2021.11.16 ம் திகதி காலை 09:00 மணிக்கு  ஆலயடிவேம்பு பிரதேச செயலக  கலாசார மண்டபத்தில் நடைபெற உள்ளது என்று ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.

நிரந்தர ஒய்வூதிய வேலை வாய்ப்பை பெற விரும்பும் ஆர்வம்  மிக்கவர்களுக்கு கீழ் வரும் ஐம்பதுக்கும் மேற்பட்ட துறைகளுக்கான பதவிகளுக்கு நேர்முக பரீட்சை நடைபெறவுள்ளது.

1.கட்டுமான துறை (மேசன், தச்சு)

 2.அலுமினியம் இணைப்பு

3.சாரதி

4.சமையல், 

5.தையல், 

6.அலுவலக உதவியாளர், 

7.இயந்திரம் இயக்குனர்,  

8.நடனம், 

9.விளையாட்டு.... போன்ற பல பதவிகளுக்கு....


தேவையான ஆவணங்கள்

1. பிறப்பு சான்றிதழ்

2. தேசிய அடையாள அட்டை

3. பாடசாலை விடுகை பத்திரம்

4. கிராம சேவையாளர் நற்சான்றிதழ்

5. இரண்டு  வேறு சமூக மட்ட நற்சான்றிதழ்கள் ( கோவில், கழகங்கள், சமாதான நீதவன் )

6. துறை சார் அனுபவங்கள் அல்லது திறமைகள் இருப்பின் உறுதிப்படுத்தும் சான்றிதழ்கள்

போன்ற  உண்மை பிரதி மற்றும் போட்டோ பிரதிகளுடன்  உரிய நேரத்திற்கு  விரும்பியவர்கள் சமுகமாளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களை HRDO -0759099565, SDO - 0776590212 ஆகிய தொலைபேசி இலங்களுடன் தொடர்பு கொண்டு கேட்க முடியும் என்று பிரதேச செயலகம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.



இளைஞர்களின் தொழில் வாய்ப்புக்கான நேர்முக பரீட்சை இளைஞர்களின் தொழில் வாய்ப்புக்கான நேர்முக பரீட்சை Reviewed by Editor on November 15, 2021 Rating: 5