ஐக்கிய ராச்சியத்தின் உயர்ஸ்தானிகரை சந்தித்த ஹாபிஸ் நசீர் அஹமட் எம்.பி

ஐக்கிய ராட்சியத்திற்கான இலங்கை தூதுவர் ஷாராஹ் ஹல்டன் ( Sarah Hulton OBE) இன்று மட்டக்களப்பு மாவட்டதிற்கு விஜயம் செய்து மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களை இன்று (07) செவ்வாய்க்கிழமை சந்தித்து இலங்கையின் சமகால நிலைமைகள் தெடர்பாக விரிவாக கலந்துரையாடினர்.

இலங்கை உற்பட உலகலாவிய ரீதியில் ஏற்பட்ட கொரோணா பாதிப்பினால் பொருளாதாரம் மற்றும் ஏனைய துறைகளில் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடியதோடு, மட்டக்களப்பு மாவட்டத்தில் அதனால் மக்கள் எதிர்நோக்கும் சமூக,பொருளாதார தாக்கங்களை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் பிரித்தானிய தூதுவரிடம் தெளிவு படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில்  முஸ்லிம்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கி வருகின்ற  காணி அபகரிப்பு, பிரதேச செயலக எல்லை நிர்ணயம் மாற்றங்கள் தொடர்பிலும் சுட்டிக்காட்டியோதோடு அது தொடர்பிலான ஆவணங்களும் பிரித்தானிய தூதுவரிடம் கையளிக்கப்பட்டது.



ஐக்கிய ராச்சியத்தின் உயர்ஸ்தானிகரை சந்தித்த ஹாபிஸ் நசீர் அஹமட் எம்.பி ஐக்கிய ராச்சியத்தின் உயர்ஸ்தானிகரை சந்தித்த ஹாபிஸ் நசீர் அஹமட் எம்.பி Reviewed by Editor on December 07, 2021 Rating: 5