கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட 2021ஆம் ஆண்டுக்கான சிறந்த கால்நடை பண்ணையாளர்களை தெரிவு செய்வதற்கான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா வெள்ளிக்கிழமை (10) திருக்கோவில் காஞ்சிரங்குடா கால்நடை உற்பத்தி வள நிலையத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் டாக்டர் எம்.ஏ.எம்.பாஜி, கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் டாக்டர் எம். ஏ.நதீர் ஆகியோர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் மற்றும் பணப் பரிசில்களை வழங்கி வைத்தனர்.
அம்பாறை மாவட்ட மட்டத்திலான சிறந்த கால்நடை உற்பத்தி பண்ணையாளர் தெரிவில் அக்கரைப்பற்று ஏ. எல்.ஆதம் லெப்பை (Adam & Sons Farm) என்பவரது ஆட்டுப்பண்ணை மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றமைக்காக அவருக்கு சான்றிதழ்,15,000 ரூபா பணம் மற்றும் பரிசில் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.