கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வருடாந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பிரதேச மட்ட கலை இலக்கிய போட்டித்தொடரில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மற்றும் துளிர் விடும் இலக்கியம் நூல் வெளியீட்டு விழா அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் அஷ்ஷேக் ரீ.எம்.முஹம்மட் அன்சார் அவர்களின் தலைமையிலும் கலாச்சார உத்தியோகத்தர் திருமதி நவப்பிரியா பிரசாந்த் அவர்களின் ஒருங்கிணைப்பிலும் மிக விமர்சையாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி ஏ.கே. றொசின்தாஜ் அவர்களும், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஜனாப் ஏ.எல். தமீம் அவர்களும் கலந்து சிறப்பித்தர்.
அதிதிகளாக மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஜனாப் ஏ.எல்.தெளபீக், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜனாப் எம்.எச்.எம்.முக்தார் ஹுசையின், மத்தியஸ்த சபை உத்தியோகத்தர் ஜனாப் எம்.எம்.எம்.அமீற் அஹ்ஸனி மற்றும் திட்டமிடல் பிரிவின் பிரதான முகாமைத்துவ உத்தியோகத்தர், பாடசாலை ஆசிரியர்கள், கலைஞர்கள் என பலரும் பங்குபற்றினர்.