புத்தளம் மாவட்டத்துக்கு வியாழக்கிழமை (16) காலை விஜயம் செய்த மக்கள் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கற்பிட்டி பிரதேச சபைக்குட்பட்ட நுரைச்சோலை, பூலாச்சேனை, ஆலங்குடா உள்ளிட்ட கிராமங்களை பார்வையிட்டார்.
அத்துடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்புகொண்டு, வெள்ள நீர் தேங்கியிருக்கும் பகுதிகளில் நீரினை அகற்றுவதற்கான மேலதிக நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.
இதேவேளை, குறித்த பிரதேசங்களில் இடம்பெற்ற மக்கள் சந்திப்புக்களில் கலந்துகொண்ட அவர், கடந்த 06 மாதகால சிறைப்படுத்தலின் போது, தனது விடுதலைக்காக பிரார்த்தித்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த றிஷாட் எம்.பி
Reviewed by Editor
on
December 16, 2021
Rating: