ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச்செயலாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் உதவி நிர்வாக அதிகாரியும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியப் பணியகத்தின் பணிப்பாளருமான கன்னி விக்னராஜா அவர்கள் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களை நேற்று (15) புதன்கிழமை முற்பகல் சந்தித்தார்.
பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ரொபர்ட் ஜுகாம் அவர்களும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச்செயலாளருக்கும் சபாநாயகருக்கும் இடையில் சந்திப்பு
Reviewed by Editor
on
December 16, 2021
Rating: