புதிய பிரதேச செயலாளராக திரு. ஜீ. அருணன் பதவியேற்றார்

(ஜெமீல் கல்குடா)

கோறளைப்பற்று-வடக்கு, வாகரைப் பிரதேச செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளராக இலங்கை நிர்வாக சேவை அதிகாரி திரு.ஜீ.அருணன் அவர்கள் இன்று (01) புதன்கிழமை பதவியேற்றுக்கொண்டார்.

புதிய செயலாளரை, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் வரவேற்று தமது அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

வரவேற்பு  அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய புதிய பிரதேச செயலாளர் தனது உரையில்- 

" கடந்தகால யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படும் வாகரைப் பிரதேசத்தினதும் , மக்களதும் முன்னேற்றத்திற்காகவும், சுபிட்சமான வாழ்வை ஏற்படுத்தும் பொருட்டும் நேர்மையாகச் செயற்படுவேன் எனவும் அதேபோல் இங்கு கடமை புரியும்  நீங்கள் அனைவரும் இப்பிரதேசத்திற்காக தியாக மனப்பான்மையுடன் ஒத்துழைப்பு வழங்கி சேவையாற்ற வேண்டுமெனவும்  வேண்டிக்கொண்டார். 

அதன் பின்னர், புதிய பிரதேச செயலாளர் தனது பதவியேற்பு கடிதத்தில் கையொப்பமிட்டு பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் ஜனாப். ஏ.எஸ்.ஜெமீல் அவர்களிடம் கையளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






புதிய பிரதேச செயலாளராக திரு. ஜீ. அருணன் பதவியேற்றார் புதிய பிரதேச செயலாளராக திரு. ஜீ. அருணன் பதவியேற்றார் Reviewed by Editor on December 01, 2021 Rating: 5