அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற கொவிட் விழிப்புணர்வு செயலமர்வு

(றிஸ்வான் சாலிஹு)

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் அனுசரணையில் மாணவர்களுக்கான COVID-19 விழிப்புணர்வு மற்றும் சிறந்த சுகாதார வாழ்க்கை முறை சம்மந்தமான செயலமர்வு செவ்வாய்க்கிழமை (14) அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) கேட்போர் கூடத்தில், பாடசாலை அதிபர் எஸ்.றிபாயுடீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் விசேட அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையின் சுகாதார அதிகாரி டாக்டர் எம்.என்.நபீல் அவர்கள் கலந்து சிறப்பித்தத்தோடு, வளவாளர்களாக சமூக நல மருத்துவ உத்தியோகத்தர்களான டாக்டர் எஸ்.சித்தி சாமிலா, டாக்டர் அமிலா ஜமால்டீன் ஆகியோர் கலந்து சிறப்பித்து மாணவர்களுக்கு சிறந்த சுகாதார வாழ்க்கை முறை சம்மந்தமான பல அறிவுரைகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.











அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற கொவிட் விழிப்புணர்வு செயலமர்வு அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற கொவிட் விழிப்புணர்வு செயலமர்வு Reviewed by Editor on December 15, 2021 Rating: 5